பிளஸ் 2, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஏர்இந்தியா நிறுவனத்தில் பணி

Unknown | 9:01 AM | 0 comments

ஏர் இந்தியா நிறுவனத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் செயல்பட்டு வரும் விமானங்களில் விமானப் பணியாளர் பணியில் சேர திருமணமாகாத இந்திய இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதன்பின்பு 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அதன் பின்னர் காலியிடங்கள் ஏற்படுவதை பொறுத்து மீண்டும் பணியில் அமர்த்தப்படலாம்.
பணி: Cabin Crew
பிராந்தியம் வாரியான காலியிடங்கள் விவரம்:
வடக்கு பிராந்தியம் (தில்லி) - 35
கிழக்கு பிராந்தியம் (கொல்கத்தா) - 09
தென் பிராந்தியம் (பெங்களூர்) - 13, ஹைதராபாத் - 13
மேற்கு பிராந்தியம் (மும்பை) - 13
மொத்த காலியிடங்களில் ஆண்களுக்கு 50 சதவிகிதமும், பெண்களுக்கு 50 சதவிகித இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு: 18.06.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் டெக்னாலஜி பிரிவில் 3 வருட பட்டம் அல்லது பட்டயம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. இதனை AIR INDIA LIMITED என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். டி.டி.யை நேர்முகத் தேர்வின்போ சமர்ப்பிக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு குழுவிவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Category:


உங்களுடைய படைப்புகள், ஆலோசனைகளை madukkurbayan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

0 comments